0 0
Read Time:1 Minute, 44 Second

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கோப்பாடி கிராமத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளையும் மற்றும் தார் சாலைகளையும் பாதுகாப்பின்றி இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தையும் பார்வையிட்டார் பிறகு அரசு வழங்கும் ஆவாஸ் பிலஸ் திட்டத்தின் கீழ் காங்கிரீட் வீடுகள் வழங்கத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளி திருஞானம் என்பவரின் கட்டிட வேலை நடைபெறும் வீட்டு கட்டிடத்தை பார்வையிட்டு வேலை செய்துவரும் கொத்தனார்யிடம் செங்கல் எடுத்துக் கொடுத்து விரைவில் வீட்டை கட்டி முடிக்க வேண்டும் எனவும் புதுமனை புகுவிழாவிற்கு என்னை அழைக்கவும் என பயனாளி இடம் கேட்டுக்கொண்டார்.

உடன் குமராட்சி ஊராட்சிமன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி விஜயகுமார் வார்டு உறுப்பினர் மணிவாசகம், ராஜமலையசிம்மன் மற்றும் விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் தொகுதி செயலாளர் மணவாளன் ஒன்றிய செயலாளர்கள் சங்கர், பகலவன் பொறுப்பாளர் பாலா, ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %