0 0
Read Time:1 Minute, 31 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, வைதீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் கோமல் ஆர்கே அன்பரசன் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணை செயலாளர் ராஜி, வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் காந்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் நலங்கிள்ளி, மணல்மேடு பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், சீர்காழி நகர பொறுப்பாளர்கள் அருண்பாலாஜி,குத்தாலம் பேரூர் கழக செயலாளர் நைனாபாலு, கட்சி நிர்வாகிகள் துரைசிங்கம், ராஜாமுகமது, மணல்மேடு, சிவா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %