0 0
Read Time:1 Minute, 57 Second

தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தரங்கம்பாடி தாலுக்கா சங்கம், பொதுதொழிலாளர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து தரங்கம்பாடி சமையன்காலனி, ஆர்.என் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

இந்நிகழ்வில் தரங்கை தாலுக்கா ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் சங்கத்தலைவர், எஸ் ஆர் கார்த்திகேயன், துணைத்தலைவர் குமார், செயலாளர் சந்தனசாமி, துணை செயலாளர் ராசிக், தொழில்நுட்பஅணி செயலாளர் பிரகாஷ், விநாயகர்பாளைய துணைத்தலைவர் இராமகிருஷ்ணன் ஆசிரியர் பிருதிவிராஜன்,
காவாளமேட்டுத்தெரு பிரமுகர் இரவிச்சந்திரன் பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் அமுல் ராஜ் , உறுப்பினர்கள் விஷ்வா ஹரிஷ் காளிதாஸ் அய்யப்பன் மற்றும்பலர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இறுதியில் சமையன் தெரு பொறுப்பாளர் கருணாநிதி,
தரங்கை ஹயர் கூட்ஸ் சங்கத்திற்கும், பொதுதொழிலாளர் சங்கத்திற்கும், ஏகே சந்துரு, சிங்கை கிருஷ்ணன், நந்தகுமார், மணிவண்ணன் மற்றும் உதவிபுரிந்த அனைவர்களுக்கும் உதவி பெற்ற மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.

நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஹயர்கூட்ஸ் சங்க பொருளாளர் மாணிக்க. அருண்குமார் செய்தார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %