0 0
Read Time:1 Minute, 50 Second

குமராட்சி ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையின்படி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளிகளான குமராட்சி மற்றும் கீழவன்னியூர் துவக்க பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர்கள் சுகுணா மற்றும் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மேலதாலத்துடன் மாணவர்களை வரவேற்றினார் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் பெ.கண்ணுசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறினார். பிறகு தரையில் அமர்ந்து மாணவரின் கையைப் பிடித்து கற்பலகையில் உயிரெழுத்து அ ஆ இ ஈ எழுதி இல்லம் தேடி கல்வி திட்டத்தை துவக்கி வைத்தார் உடன் மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஆ.ஜீவானந்தம் வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன் ஆசிரியர் பயிற்றுநர் மல்லிகா இடைநிலை ஆசிரியர் சில்வியா, அம்பிகாசோனியா , அகிலா முன்னாள் தலைமையாசிரியர் நகுலன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %