0 0
Read Time:1 Minute, 59 Second

வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியில்  பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோட்சராணி (வயது 53). கல்லுக்குழி எம்.ஜி.ஆர். நகரில்  சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வேலுசாமி (66) என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மோட்சராணியின் பெட்டி கடைக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது மோட்சராணியின் மகனுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக, வேலுசாமி கூறியுள்ளார். இதற்காக அவரிடம் இருந்து ஒருவருடத்துக்கு முன்பு ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை பெற்றுள்ளார்.  ஆனால் இதுவரை மோட்ச ராணியின் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை.

இதுகுறித்து வேலுசாமியிடம்  கேட்டதற்கு சரியான பதில் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து மோட்சராணி வடலூர் போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  வேலுசாமி (66), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவி வனிதா (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் இவர்கள்  வடலூரை சேர்ந்த மனோகரி (35), சந்தோஷ்குமார் ஆகியோரிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %