0 0
Read Time:1 Minute, 29 Second

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பூர் காவல்துறை சார்பாக மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்த கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித் தலைமையாசிரியர் இரமேஷ் தலைமை வகித்தார். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் டி.ஆர்.சிவதாஸ் கலந்துகொண்டு மாணவர்களுறக்கு பான்பராக், குட்கா, சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவலர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %