0 0
Read Time:1 Minute, 46 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது,
தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது (2021-2022) தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இவ்விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகள் சாதனைகளை குறிப்பிட வேண்டும்.

விருது பெற தகுதியுடையோர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரடியாகவே தபால் மூலமாகவோ வரும் 11.12.2021-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் .இரா.லலிதா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %