0 0
Read Time:2 Minute, 45 Second

மயிலாடுதுறையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்பு இல்லாதவர்களை கைது செய்ததால் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 6-ந் தேதி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இதுதொடர்பாக மணல்மேடு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மேட்டூரில் வேலை பார்த்து வரும் ஆனந்த் (வயது33), சங்கர் (28) ஆகியோர் கடந்த 10-ந் தேதி சங்கரின் தாயார் இறந்ததையொட்டி பட்டவர்த்திக்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் 6-ந் தேதி நடந்த மோதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி மணல்மேடு போலீசார் நேற்று அதிகாலை விசாரணைக்காக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதை தொடர்ந்து அங்கு சென்ற உறவினர்கள், அவர்கள் 2 பேரும் கடந்த 6-ந்தேதி மேட்டூரில் வேலை பார்த்ததற்கான ஆதாரங்களை போலீசாரிடம் காண்பித்தனர். அதனை போலீசார் ஏற்றுக்கொள்ளாமல் ஆனந்த் மற்றும் சங்கரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்,  விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் கட்சியினர் ஆனந்த். சங்கர் ஆகியோரை அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், உறவினர்கள் காண்பித்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து சங்கர், ஆனந்த்தை விடுவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %