0 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி மூங்கில் காட்டில் கடந்த 9ம்தேதி பிறந்து சில மணி நேரங்களே ஆன  ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச்சென்று சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து திருமயிலாடி விஏஓ சீனிவாசன் கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீர்காழியை சேர்ந்த கல்லூரி மாணவி தான் குழந்தைக்கு தாய் என்பதும், குழந்தை பிறந்தவுடன் யாருக்கும் தெரியாமல் திருமயிலாடி பகுதியிலுள்ள மூங்கில் காட்டில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகன் காளிதாஸ்(31) என்பவர் 17வயது மாணவியுடன் பழகியுள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதற்கிடையே காளிதாசுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணமானது.

இந்நிலையில் மாணவிக்கு தற்போது 18வயது பூர்த்தி அடைந்த நிலையில் குழந்தை பிறந்ததால் யாருக்கும் தெரியாமல் இருக்க மாணவி பிரசவித்த குழந்தையை மூங்கில் காட்டில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து காளிதாசை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையாறு கிளை சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %