0 0
Read Time:1 Minute, 33 Second

திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தனது 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்தவகையில் மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்கள் காலை முதல் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினர். நேற்று காலை 7 மணிக்கு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவுகளை வழங்கினார்.

இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மெத்தைகளை வழங்கினர். தொடர்ந்து மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள், பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %