0 0
Read Time:1 Minute, 15 Second

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூரில் உள்ள சிவன்கோவில் குளத்தில்  நேற்று ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். 

 அதில், இறந்தவர்  நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த சிகாமணி மகன் அரிகிருஷ்ணன்(வயது 29) என்பதும், அவர் என்ஜினியரீங் படித்துவிட்டு வீடில் இருந்ததும்  தெரியவந்தது. மேலும் இவர் குளத்தில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு போட்டு சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %