0 0
Read Time:1 Minute, 7 Second

பரங்கிப்பேட்டை அருகே சேவாமந்திர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து முட்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை ரெயிலடி அருகே சென்றபோது, அந்த வழியாக கார் எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %