0 0
Read Time:2 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சி பொய்கை வளர் நத்தம் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர் கோட்டம், அதம்பார் பிரிவு குரைமின்னழுத்த மின்சாரத்தை சரி செய்து ரூ.5 லட்சத்தை 12 பொறுப்பா ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 25 கிலோவோல்ட் ஆம்பியர் மின்மாற்றியை பொய்கைவளர்நத்தம் பகுதியில் 40 வீடுகளின் மக்கள் பயன்பாட்டிற்காக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் ரிப்பன் கத்தரித்து, மின்மாற்றியை ஆன் செய்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார், பேரளம் உதவி செயற்பொறியாளர் ஜி.பிரபாகர், உதவி பொறியாளர் நிரஞ்சனா தேவி, மின் வாரிய பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %