0 0
Read Time:2 Minute, 38 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகளை நடும் விழா மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கொக்கரக்கோ சௌமியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், ஜெயங்கொண்டன் சட்டமன்ற உறுப்பினர் க.கண்ணன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் வேலுசாமி, நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படம்; செம்பனார்கோவிலில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மரக்கன்றுகள் நடும் பொழுது எடுத்த படம்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %