0 0
Read Time:1 Minute, 44 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டி கேட்டில் அ.தி.மு.க. கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சிதம்பரம் நகர கழகத்தின் சார்பில் வண்டிகேட்டில் உள்ள அண்ணா திரு உருவ சிலைக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரு உருவ சிலைக்கும், ஜெயலலிதா திரு உருவ சிலைக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ அருள் ,மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட அவைத்தலைவர் எம்எஸ்என் குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் , டேங்க் சண்முகம், பண்ணை சக்திவேல் , ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன், சேட்டு, கருப்பு ராஜா, சிங்காரவேல், ஜானகிராமன், பரங்கிப்பேட்டை சக்திவேல், உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %