0 0
Read Time:2 Minute, 40 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் உட்பட் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காண நேர்காணல் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும். நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுயோர் மாவட்ட முழுவதும் திமுக சார்பில் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் திமுக சார்பில் வார்டு கவுன்சிலருக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து. நகராட்சி, பேரூராட்சிகளுக்கான 123 வார்டு பகுதிகளில் போட்டியிடுவோர்களுக்கான நேர்காணல் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 2 நகராட்சி 4 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் போட்டியிடுபோர் விவரம், தகுதி, கேட்டறியப்பட்டது.

இந்நிகழ்ச்சியில். மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன் பொருளாளர் ஜி.என்.ரவி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன் மற்றும் ஒன்றிய பேரூர், நகர, திமுகழகம் செயலாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %