0 0
Read Time:1 Minute, 24 Second

மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிர்பதன கலம் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் முதன்முதலாக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் குளிர்பதன கலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் பங்கேற்று, ரூ.6,10,650 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதனக் கலத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குநர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %