0 0
Read Time:2 Minute, 38 Second

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள குரூப்- B மற்றும் குரூப்- C பணிக் காலியிடங்கள் அடங்கிய SSC-CGL தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இப்பணிக் காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக 23.01.2022 வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 19.01.2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் (Online Class) நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி:தடயம் பாபு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %