0 0
Read Time:1 Minute, 44 Second

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் ஒன்றிய அதிமுக விவசாய அணி அமைப்பாளர் பாபு உட்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.அன்பழகன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மகேந்திரன், நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா- சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புளோராமேரி -மணிமாறன், சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் என்கிற ராமச்சந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %