0 0
Read Time:1 Minute, 56 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி k. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறியதாக திமுக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அஇஅதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் புவனகிரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் இணை செயலாளர் முருகுமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வன் சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் வீர மூர்த்தி செஞ்சுலட்சுமி இளங்கோவன் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் விநாயகம் ஊராட்சி செயலாளர் ஜெயசீலன் ஐ டி பிரிவு ஜெயராஜ்மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர். இறுதியில்அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்நன்றி கூறினார்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %