0 0
Read Time:1 Minute, 29 Second

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இ-சேவை மையத்தில் திருட்டுமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சீர்காழி கோவிந்தராஜன் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் ஆனந்தன் (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, மாலை இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்றார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இ-சேவை மையத்தில் இருந்த கணினி திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து ஆனந்தன், சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %