0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டம்:

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசகத்தை படித்தபோது, அவரை தடுத்து ரத்தினபுரி போலீசார் இந்து மதவெறி என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தியும், காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அத்துமீறிய ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணாவை கண்டித்தும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %