0 0
Read Time:1 Minute, 35 Second

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2-வது நாளில் பேரூராட்சிகளில் மட்டும் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 2 பேர் என 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

87 பேர் வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் கடலூர் மாநகராட்சிக்கு 10 பேரும், நகராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு 32 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 45 பேர் என மொத்தம் 87 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 4-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 5-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 7-ந்தேதி கடைசி நாள்.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %