0 0
Read Time:1 Minute, 44 Second

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள், அதிலிருந்த 21 பேரையும் சிறைபிடிக்க முயற்சித்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே 56 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும் தாயகம் திரும்பாத நிலையில், தற்போது 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு விசைப்படகையும் கைப்பற்றி, 21 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %