0 0
Read Time:1 Minute, 48 Second

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை
சேவலுக்கும் பயண சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை சேவலுக்கும் பயண சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், கோதாவரிகானி பேருந்து நிலையத்தில் இருந்து கரீம்நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சென்ற முகமது அலி என்பவர், தன்னுடன் சண்டை சேவலை கூண்டில் வைத்து கொண்டு சென்றுள்ளார். அதை கவனித்த நடத்துநர், சேவலுக்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் இல்லையெனில் பேருந்து கீழே இறங்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, சேவலுக்கும் டிக்கெட் எடுத்த பிறகு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய நடத்துநர், சேவலுக்கு டிக்கெட் பெற்றதாகவும், பயணிகளுடன் கொண்டு செல்லப்படும் செல்ல பிராணிகளுக்கும் டிக்கெட் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக தலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %