0 0
Read Time:1 Minute, 40 Second

கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை மீட்ட போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு மற்றும் சபரிஷ். இவர்கள் இவரும் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்குச் சென்றுள்ளனர். பின்னர் திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு விஷ்ணு, சபரிஷ் ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்ச அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்த, காவலர் சவுந்தரராஜன் உடனே கடலில் இரங்கி இருவரையும் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.

பின்னர் வாலிபர்கள் விஷ்ணு மற்றும் சபரியை உடனே புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். கடல் கலையில் சிக்கிய இளைஞர்களைத் துரிதமாக மீட்ட போலிஸார் சவுந்தரராஜனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %