0 0
Read Time:1 Minute, 54 Second

மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 பேர் போட்டியிடுகின்றனர். திமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 வார்டுகளில் தனித்து போட்டியிடுகின்றது. இதில் 4-வது வார்டில் சினேகா என்ற திருநங்கை போட்டியிடுகின்றார்.
காவிரி ஆற்றங்கரையில் வசிக்கும் இருளர் இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய வகையில் அவர்களது வாக்குகளையும், பொதுமக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுவிடும் முனைப்புடன் களமிறங்கியுள்ள திருநங்கை சினேகா, 4-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, தெருவில் உள்ள குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %