0 0
Read Time:2 Minute, 16 Second

ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தினை கட்டிபொட்டு 280 சவரன் நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் மருத்துவரான சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை நேரத்தில் அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்ததாக சொல்லப்படுகிறது.

அதில் வீட்டில் உள்ள அனைவர்களையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டின் முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த விசாரணை குறித்து தனி படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட இனோவா காரினை கொடைரோடு அருகே மதுரை திண்டுக்கல் 4-வழிச்சாலையில் நிறுத்தி விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில் போலீசார் ஈடுபட்டு விசாரணையை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %