0 0
Read Time:2 Minute, 9 Second

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.

இதற்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் 14 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. நேற்று வாக்கு எண்ணிக்கை 14 இடங்களிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் காலை முதலே வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஆர்வத்துடன் வந்தனர்.

அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பினர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை சுற்றுவாரியாக நடத்தப்பட்டு, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாநகராட்சிக்கு நடந்த முதல் தேர்தலிலேயே தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இது தவிர 6 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது.

இதில் திட்டக்குடி, வடலூர் நகராட்சிகள் பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திந்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %