0 0
Read Time:2 Minute, 14 Second

சேலத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அலுவலக பணிகள் வழக்கம்போல நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர், ஜே-4 நீதிமன்ற நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்த முயன்றார், இந்தச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் உடனடியாக பிரகாஷ் என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணையில், ஓமலூர் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர் பிரகாஷ் இந்த கத்தியால் குத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.

நீதிபதிக்கும் உதவியாளருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. உதவியாளர் பிரகாஷ் தாக்கியதில், நீதிபதி பொன்.பாண்டியனுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. மாவட்ட தலைமை நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று நீதிபதியை தாக்கிய ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %