0 0
Read Time:1 Minute, 12 Second

நாகை அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

வேளாங்கண்ணி: சிவகங்கை, பூம்பிடாகை திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சூர்யா (வயது21).இவர் நேற்று காலை வேளாங்கண்ணி அருகே ஒரத்தூரில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவர் தடுமாறி 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %