0 0
Read Time:2 Minute, 29 Second

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் முதுநகர், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு தமிழகம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூர் உள்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை எச்சரிப்பது ஆகும்.

மேலும் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் காரணமாகவும், கடலூரில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாலும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 4 முதல் 5 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களையும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடலூர் துறைமுக பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. படகுகளும் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %