0 0
Read Time:1 Minute, 52 Second

வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

வடலூர் ஆபத்தானபுரத்தில் உள்ள நுகர்வோர் சங்க அலுவலகத்தில் சங்கத்தலைவர் கவி வேம்பு அவர்கள் தலைமையில் நடைபெற்றது சங்க செயலாளர் நரசிம்மய்யன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா உதவி ஆய்வாளர்கள் சாவித்திரி மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இளம்புயல் ஜெயஸ்ரீ வேகவி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி விவசாய புரட்சிப்பெண் ரங்கநாயகி ஆகியோர் கலந்துகொண்டு,

பெண்களுக்கு குடும்ப வன்கொடுமை பாலியல் தொந்தரவுகள், மன ரீதியான பிரச்சனைகள் பொது நலன்கள் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கலந்து கொண்ட இல்லத்தரசி பெண்களுக்கும், ஆண்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் 50 க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %