0 0
Read Time:1 Minute, 12 Second

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்களின் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி பகுதியில் நேற்று கருங்கல் அலை தடுப்புச்சுவரின் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதிய வண்ணம் இருந்தன.

ஐந்து நாட்களாக மீன்பிடிக்க செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %