0 0
Read Time:1 Minute, 55 Second

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்த கும்பலை தட்டிக் கேட்ட லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பெட்ரோல் போடுவதற்காக பணகுடி ஊருக்குள் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டிருந்தனர். இதனை அங்கு வந்த கலைச்செல்வன் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கலைச்செல்வனை தாக்கியதில் படுகாய மடைந்துள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கலைச்செல்வனை பணகுடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணகுடி போலீசார் தகராறில் ஈடுபட்டு கலைச்செல்வனை கொலை செய்த பணகுடி கோரி காலனியை சேர்ந்த கொலையாளிகள் மணீஷ் ராஜா, ஆட்டோ குமார், பாலசுப்பரமணியன், சிவா ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய மாணிக்கராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %