0 0
Read Time:1 Minute, 33 Second

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டிற்கு உழைத்து முன்னோடிகள் தந்தைபெரியார், பாலகங்காதர திலகர், மகாகவி பாரதியார், திருவி.க., பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் நினைவுகள் குறித்து மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் சிறப்புரையாற்றி புகழ் சேர்த்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பெரியார் எழுதிய ” பெண் ஏன் அடிமையானால்?” என்னும் புத்தகம் பரிசளித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் ஜெக முருகன், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நிர்வாகிகள் பூங்கோதை, அல்போன்சா, ராஜேஸ்வரி, கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சேகர், காவிரித்தாய் அறக்கட்டளை துறை துணைத் தலைவர் விவேகானந்தா ராஜாராமன், ஜோதிராஜன், ஹரிபிரசாத், மல்லியம் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %