0 0
Read Time:2 Minute, 20 Second

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை முடி பூண்டார் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். ஆசாரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வெண்ணிலா(வயது 29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வீரக்குமார், ஆசாரி வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து வேலை இல்லாத காரணத்தால் பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே பண பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா ஆத்திரம் அடைந்து வீட்டின் உள்ளே உள்ள அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

வீரக்குமார் கதவை தட்டிய போதும் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வீரக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணிலா அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தன்னுடைய சேலையால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெண்ணிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வெண்ணிலாவின் தாயார் ஜானகி, பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %