0 0
Read Time:3 Minute, 8 Second

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

ஜெகதீஷ் (துணைத்தலைவர்):- உம்பளச்சேரி பகுதியில் பொது மயான கட்டிடம் கட்ட வேண்டும்.
ஞானசேகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- கொத்தங்குடி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
முத்துலட்சுமி (அ.தி.மு.க.):- பாங்கல் ஊராட்சியில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு மயான கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

மாசிலாமணி (தி.மு.க.):- கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும்.
கஸ்தூரி (தி.மு.க.):- வானவன் மகாதேவி கச்சவெளிப்பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும்.
செல்வி (தி.மு.க.):- நீர்முளை பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் சரிவர செயல்படவில்லை. இதனை சரி செய்து குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், அனைத்து பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரம்யா (அ.தி.மு.க.):- பண்ணத்தெரு ஊராட்சியில் மயான சாலை, மயான கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் ஊராட்சி முழுவதும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு):- காடந்தேத்தி ஊராட்சியில் மயான சாலை மயான கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):- நாலுவேதபதி மேலத்தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
தீபா (அ.தி.மு.க.):- அவரிக்காடு கடைத்தெரு பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும்.
தமிழரசி (தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

முக்கியமாக தலைஞாயிறு ஒன்றியம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %