0 0
Read Time:1 Minute, 1 Second

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மணல்மேடு அருகே உள்ள கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் முரசொலிமாறன் (வயது28). தொழிலாளி.

இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %