0 0
Read Time:2 Minute, 39 Second

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் நிவாசா ரத்தினம்(வயது 30). கொத்தனார். இவருடைய மனைவி ஹேமா(25). இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை நிகன்யா.

நேற்று மாலை நிவாசா ரத்தினம், தனது வீட்டின் பின் பகுதியில் மின் விளக்கை ஒளிர செய்வதற்காக சுருண்டிருந்த மின்வயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் துடி, துடித்து கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்காக அவருடைய மனைவி ஹேமா ஓடிச்சென்று அவரைப்பிடித்து இழுத்தபோது, ஹேமா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனிடையே 2 வயது குழந்தை நிகன்யா தாயின் அருகே சென்றதில் குழந்தையையும் மின்சாரம் தாக்கியது.

இதில் நிவாசா ரத்தினம், அவருடைய மனைவி ஹேமா, இவர்களுடைய குழந்தை நிகன்யா ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது ஒரே வீட்டில் கணவனும், மனைவியும் குழந்தையுடன் இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் 2 வயது குழந்தை பலியானது அந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %