0 0
Read Time:2 Minute, 1 Second

காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கடலூா் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் முருகன், தொடக்கக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், ராமதாஸ், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அருள் சங்கு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் பரமசிவம் வரவேற்றாா்.

மாவட்ட மன நல மருத்துவா் தீபிகா குமாா், கண் மருத்துவா் சுமதி, காது-மூக்கு-தொண்டை மருத்துவா் மன்னா் மன்னன், எலும்பியல் மருத்துவா் கிரிதரன் ஆகியோா் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். மேலும் முகாமில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல், உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுதல், பழைய அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளும் நடைபெற்றன.

கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி இயக்கம், காட்டுமன்னாா்கோவில் வட்டார வள மையம் சாா்பில் முகாமுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %