0 0
Read Time:2 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஓன்றியம் சார்பில் உளுத்துகுப்பை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் மற்றும் உளுத்துகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் அமமுக ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எஸ்.ரீயாஸ் உள்ளிட்ட மாற்றுகட்சி சேர்ந்தவர் பெண்கள்-இளைஞர்கள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொள்வதற்காக மயிலாடுதுறை கால்டக்சி பகுதியிலிருந்து இருசக்க வகனத்தில் 2-கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று உளுத்துகுப்பையில் நடைபெற்ற சிரிப்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். மேலும் அவர்கள் வரும் வழி நெடுகிலும் பட்டாசுகள் வெடித்தும் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் வாழ்க என கோஷங்கள் எழுப்பியவாறு வந்தடைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ நிவேதா முருகன் தமிழக முதல்வர் செயல்பாட்டால் மாற்றுகட்சியை சேர்ந்த ஏராளமானோர் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிகழ்வு தொடர்ந்து நீடிக்கும் என்றும் இதனால் தமிழகத்தில் எதிர்கட்சியே இல்லாத சூழல் உருவாகிவிடும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியல் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான செல்வராஜ் குண்டுமணி என்கிற செல்வராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கொக்கரக்கோ. சௌமியன், ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %