0 0
Read Time:1 Minute, 23 Second

கடலூர் மாவட்டம் கிள்ளை TATA சமுதாயக்கூடத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம் கிள்ளை பேருராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, கிள்ளை பகுதியில்,இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், மண் மாதிரி பரிசோதனை முகாம் கிள்ளையில் நடத்துவது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் தலைமையிலான மக்கள் ஆட்சியில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக MRK பன்னீர்செல்வம் பொருப்பேற்று வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தமைக்காக நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, குறிப்பாக இயற்கை விவசாயத்தை மேம்படுத்த 300 கோடி நிதி ஒதுக்கியமைக்கு பாராட்டும், நன்றியும் விவசாயிகள் தெரிவித்தனர்!

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %