0 0
Read Time:1 Minute, 18 Second

பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). மீனவர். இவர் நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் மீனவர் கிராமம் பகுதியில் ஒரு சவுக்குத் தோப்பில், விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தன் குடும்ப சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். இதன் காரணமாக, மனமுடைந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %