0 0
Read Time:1 Minute, 17 Second

வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நகைகள் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில் 965 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய பட்டியல் அனுப்பப்பட்டது. இதில் 268 பயனாளிகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் நேற்று காலை வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு சான்றிதழுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். சமரச பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால், அவர்களாகவே கலைந்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %