0 0
Read Time:1 Minute, 42 Second

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த முடிகண்டநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது62). விவசாயி. இவர் சம்பா சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதாலும், தற்போது கோடைக்காலத்தில் விதைக்கப்பட்ட உளுந்து மற்றும் பாசி பயறும் சரியாக விளையாததாலும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் வீட்டில் சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜெயராமன் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குருணை மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %