0 0
Read Time:1 Minute, 40 Second

கடலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தொழிலாளி. இவர் கடந்த 7.1.2019 அன்று மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அரசு பஸ்சை ஓட்டி வந்த நெல்லிக்குப்பம் அடுத்த மாளிகைமேடு எஸ்.கே.பாளையத்தை சேர்ந்த சம்பத் (43) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி சிவபழனி தனது தீர்ப்பில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சம்பத்துக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %