0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பாலு, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய கட்டிடத்துக்கான பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 15-வது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டிடம் கட்டி முடிந்தவுடன் இங்கு ஆஸ்பத்திரி செயல்படும் என்றார். \

விழாவில் நகரசபை உறுப்பினர்கள் சதீஷ்குமார், காந்திராஜா, செந்தில்குமார், ஜெயந்தி ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %