0 0
Read Time:1 Minute, 46 Second

சென்னை, துரைபாக்கத்தில் டீசலை உறுஞ்சிய போது வட மாநில வாலிபர் மூச்சு திணறி பலியானார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட் (வயது 40). இவர் கடந்த 22-ந் தேதி வேலை தேடி சென்னை வந்தார். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர், வேலை காரணமாக கடந்த 25-ந் தேதி துரைப்பாக்கம் சாலை விரிவாக்கம் பகுதியில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுஜித்பாண்டே (40) என்பவரை தேடி சென்றார்.

அங்கு மோட்டாரை இயக்க 200 லிட்டர் கேனில் டீசல் வைத்திருந்தனர். அங்குள்ள ஊழியர்கள் 20 லிட்டர் கேனில் நிரப்புவதற்காக டியூப் முலம் டீசலை உறிஞ்சு எடுக்க முயன்றனர். இதற்கு சோனுசூட் உதவி செய்த நிலையில், டியூப்பில் உறியும்போது டீசல் அவரது தொண்டையில் சென்று அடைத்து மூச்சுவிட சிரமப்பட்டார்.

இதைக்கண்ட சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோனுசூட் நேற்று பலியானார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %