0 0
Read Time:1 Minute, 24 Second

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் இந்த குளத்தில் மீன்கள் மற்றும் இறால்கள், தவளைகள் மற்றும் பாம்பு ஆகியவை செத்து கரை ஒதுங்க தொடங்கின. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றும் ஏராளமான மீன்கள் மற்றும் இறால்கள் செத்து கரை ஒதுங்கின. குளத்தில் இருந்த மீன்கள், இறால்கள் எப்படி இறந்தன? என்று தெரியவில்லை. குளத்து நீரில் மர்ம நபர்கள் யாராவது விஷம் கலந்தார்களா? அல்லது வேறு காரணத்தால் மீன்கள், இறால்கள் செத்து மிதந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %